சிறுவர்மணி

விவேகானந்தரின் பொன்மொழிகள்!

பாலசுப்பிரமனியம்


வாழ்க்கையின் நோக்கம் என்ன?... அதன் பயன் என்ன?... என்பதை அறிவதே உயர்தரக் கல்வியின் குறிக்கோளாய் இருத்தல் வேண்டும்.

மனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எதையும் சாதிக்க இயலும். மலைகளையும் அணுவாக ஆக்க முடியும்.

நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமையின் உண்மையாகும்.

தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் நம்பிக்கையும் நிச்சயமாக வராது.

பேசுவதைக் குறைத்துக்கொண்டு செயலில் இறங்குதல் மிக முக்கியம்.

மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.

உலகிற்கு சேவை செய்வதே நமது நோக்கம். நமது பெயர்களைப் பறைசாற்றுவதற்காக அல்ல.

நம் அனைவரிலும் கடவுள் இருக்கிறார். எனவே நம் மீதே  நமக்கு நம்பிக்கை ஏற்படவேண்டும்.

உலகம் முழுவதையும் நாம் விழித்தெழச் செய்ய வேண்டும். 

உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதன் பொருட்டும் உண்மையைத் துறக்கலாகாது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT