கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் யானைப்பாகன் கையிலுள்ள ஆயுதம் ஒன்றின் பெயர் கிடைக்கும்.
விடை தெரிந்து விட்டதா? கட்டங்களை நிரப்ப ஆரம்பியுங்கள்...
1. பெரியவர்களுக்கு முன்பு மரியாதையாக இருக்க இது தேவை.
2. தேனீக்களின் பாடல் ஓசை...
3. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, புனித நதிகளில் நடக்கும் புனிதக் குளியல் திருவிழா.
4. சாமி ஊர்வலம் செல்லும் தேர் சிறிதாக இருந்தால் இப்படி அழைப்பார்கள்.
5. பெரிய நகரங்களை இப்படியும் சொல்வார்கள்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அடக்கம்,
2. ரீங்காரம்,
3. கும்பமேளா,
4. சப்பரம்,
5. மாநகரம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : அங்குசம்