மகளிர்மணி

மருத்துவம் பயிலும் மூதாட்டி

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

மருத்துவப் படிப்புக்கான தேவை அதிகமாக உள்ளது. மருத்துவக் கல்வியில் சேர "நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு, மாணவர்கள் பள்ளிக்கல்வியின்போதே கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே இருந்தாலும், தன்னிறைவு என்பது கேள்விக்குறியே. பலரும் மருத்துவம் படிக்க விரும்பி, பல ஆண்டு முயற்சித்தும் வாய்ப்புக் கிடைக்காமல் போகும்போது மாற்றுக் கல்வியை தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கிவிடுகின்றனர். பலர் உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் படித்தாலும் உலக நடப்புகளின் அடிப்படையில் அதுவும் பிரச்னையாகிவிடுகிறது.

இந்த சூழலில், இளமைக்கால எண்ணப்படி 63 வயது பேரிளம் பெண் ஒருவர் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டை காரைக்கால் மருத்துவக் கல்லூரியில் படிக்கத் தொடங்கி, நீட் தேர்வு எழுத திட்டமிடும் இளம் மாணவ மாணவியருக்கு ஊக்கமாகத் திகழ்கிறார்.

மத்திய பிரதேசத்துக்கு உள்பட்ட அம்லா பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத் யாதவ் மனைவி சுஜாதா ஜடா (63). இவர்களது மகன் மருத்துவர். மருத்துவராக வேண்டும் என்கிற எண்ணம் சுஜாதா ஜடாவுக்கு இருந்த நிலையில், ராணுவத்தில் பணி கிடைத்துள்ளது. பணிக் காலத்துக்குப் பின் வங்கிப் பணி. அதிலிருந்து ஓய்வு பெற்றார்.

இளமை கால எண்ணத்துக்கு உயிர் கொடுத்து அதை நிறைவேற்றுவதற்கான காரணங்களைப் பல நிலைகளில் ஆராய்ந்த இவர், அதற்காக முறையாகப் பயிற்சி எடுத்து நீட் தேர்வு எழுதினார்.

2-ஆவது முறையாகத் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்ற இவர், காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பை கடந்த ஜனவரியில் தொடங்கியுள்ளார்.

பிளஸ் 2 முடித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கும் நிலையில், கல்லூரி பேராசிரியரைக் காட்டிலும் அதிக வயதில், வகுப்பறையின் முதல் இருக்கையில் உட்கார்ந்து பயின்று வருகிறார் சுஜாதா ஜடா.

இதுகுறித்து அவர் கூறியது:

""மருத்துவம் பயின்று மருத்துவமனை இல்லாத பகுதியில் மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பது எனது நீண்ட கால விருப்பம். அதற்கான வாய்ப்பு தற்போதுதான் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் கடுமையாக முயற்சித்து வெற்றி பெற்றேன்.

மருத்துவக் கல்லூரியில் அனைவரும் இளம் பருவத்தினராக இருந்தாலும், அனைவரும் தமது சக மாணவராகவே கருதி பழகுகின்றனர். தன்னம்பிக்கை இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். நிச்சயமாக எனது எண்ணப்படி நல்ல முறையில் மருத்துவக் கல்வியை முடித்து மருத்துவச் சேவையை செய்வேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT