உளுந்து வடை மேலும் மிருதுவாக, ருசியாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடாவை நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்து, வடைகளாகப் பொரித்து எடுக்கவும்.
மோர்க் குழம்பு செய்யும்போது, அன்னாசி பழத் துண்டுகள் நறுக்கி சேர்த்துக்கொண்டால் மிதமான வாசனையுடன் சுவையாக இருக்கும்.
அடைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை இட்டு நன்கு கலந்து, அடை வார்த்தால் அற்புதமாய் இருக்கும்.
கேசரி செய்யும்போது கொஞ்சம் பால் பௌடர் சேர்த்துக்கொண்டால், உதிரியாகவும் , மென்மையாகவும் இருக்கும்.
கொண்டைக் கடலையை முளை கட்டி எடுத்து, பின்னர் அவிழ்த்து சுண்டல் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். சத்துகள் அதிகமான சுண்டல் இது.