மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

உ.இராமநாதன்

உளுந்து வடை மேலும் மிருதுவாக, ருசியாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடாவை நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்து, வடைகளாகப் பொரித்து எடுக்கவும்.

மோர்க் குழம்பு செய்யும்போது, அன்னாசி பழத் துண்டுகள் நறுக்கி சேர்த்துக்கொண்டால் மிதமான வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை இட்டு நன்கு கலந்து, அடை வார்த்தால் அற்புதமாய் இருக்கும்.

கேசரி செய்யும்போது கொஞ்சம் பால் பௌடர் சேர்த்துக்கொண்டால், உதிரியாகவும் , மென்மையாகவும் இருக்கும்.

கொண்டைக் கடலையை முளை கட்டி எடுத்து, பின்னர் அவிழ்த்து சுண்டல் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். சத்துகள் அதிகமான சுண்டல் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT