மகளிர்மணி

ரவை பொங்கல்

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

ரவை -  300 கிராம்
பயத்தம்பருப்பு - 100 கிராம்
முந்திரிப்பருப்பு  - 25 கிராம்
மிளகு  - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறுதுண்டு
எலுமிச்சைச்சாறு  - 1தேக்கரண்டி
நெய் -  100 மி.லி
கறிவேப்பிலை - 1பிடி
உப்பு  - தேவையானது

செய்முறை:  

முந்திரிப் பருப்பை  ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும்.  பயத்தம் பருப்பை கால்  பதம் வேகவைத்து  நீரை வடித்து  வைக்க வேண்டும்.  வடித்த நீரில் ரவையை வேக வைத்துக் கொள்ளலாம். வாணலியை  அடுப்பில்  வைத்து நெய்யை ஊற்றிக் காயவிட்டு  மிளகு,  சீரகத்தைப் போட்டு  துருவிய  இஞ்சியைப் போட்டு தேவையான  தண்ணீர்விட்டு பருப்பு தண்ணீரையும்  விட்டு உப்பு போட்டு கொதிக்க  விட வேண்டும் ரவையைப்  போட்டு வெந்ததும் பயத்தம் பருப்பை போட்டு  கிளறி  எலுமிச்சைச் சாறுவிட்டு  கீழே  இறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT