தேவையானவை:
ரவை - 300 கிராம்
பயத்தம்பருப்பு - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 25 கிராம்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறுதுண்டு
எலுமிச்சைச்சாறு - 1தேக்கரண்டி
நெய் - 100 மி.லி
கறிவேப்பிலை - 1பிடி
உப்பு - தேவையானது
செய்முறை:
முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். பயத்தம் பருப்பை கால் பதம் வேகவைத்து நீரை வடித்து வைக்க வேண்டும். வடித்த நீரில் ரவையை வேக வைத்துக் கொள்ளலாம். வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றிக் காயவிட்டு மிளகு, சீரகத்தைப் போட்டு துருவிய இஞ்சியைப் போட்டு தேவையான தண்ணீர்விட்டு பருப்பு தண்ணீரையும் விட்டு உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும் ரவையைப் போட்டு வெந்ததும் பயத்தம் பருப்பை போட்டு கிளறி எலுமிச்சைச் சாறுவிட்டு கீழே இறக்க வேண்டும்.