கூட்டு, குழம்பு ஆகியவற்றிற்கு அரிசி மாவை கரைத்து விடுவதற்குப் பதில் பொட்டுக் கடலை மாவைச் சேர்த்துவிட, சீக்கிரம் ஊசிப்போகாது. குழம்பும் கெட்டியாக இருக்கும்.
* சாப்பாத்திமாவு பிசையும் போது கால் டம்ளர் பால்விட்டுப் பிசைந்தால், ஒரு துளி கூட எண்ணெய் விடாமலே புஸ்ùஸன்று மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
* ரவையை உப்புப் போட்டு பிசறிவைத்து அதனுடன் உளுந்தை ஊறவைத்து அரைத்துப் போட்டு தோசை வார்த்தால் அதன் ருசியே அலாதிதான்.
கொத்துமல்லிச் சட்னி மீந்து போய்விட்டால், மோரில் சட்னியைப் போட்டு கரைத்துவிட சுவையான மசாலாமோர் தயார்.