கல்பனா சாவ்லாவுக்கு பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியாவில் பிறந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெறுகிறார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா.
34 வயதாகும் ஸ்ரீஷா பாண்ட்லா ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்தவர். ஐந்து வயதாக இருக்கும்போது தந்தை டாக்டர் பாண்ட்லா முரளிதரும், தாய் அனுராதாவும் அமெரிக்கா ஹுஸ்டனுக்கு இடம் பெயர்ந்தனர்.
விஞ்ஞானியான பாண்ட்லா முரளிதர், அமெரிக்க அரசுத் துறையில் பணிபுரிகிறார். அமெரிக்காவிலேயே தனது படிப்பை மேற்கொண்ட ஸ்ரீஷா, அங்குள்ள அங்குபர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பெறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.
அரசு சார்ந்த விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை கவனித்து வந்த ஸ்ரீஷா பின்னர் நிறுவனத்தின் துணைத் தலைவராக உயர்ந்தார்.