மகளிர்மணி

கொள்ளு  பனீர் மசாலா 

ராதிகா அழகப்பன்

தேவையானவை:

கொள்ளு பருப்பு - 150 கிராம்
பனீர் - 50 கிராம்
காப்சிகம் - 1
தக்காளி - 2
வெங்காயம் - 2
இஞ்சி, பூண்டுவிழுது - அரை தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க
கொத்துமல்லி - கொஞ்சம்

செய்முறை:

தக்காளி, காப்சிகம், வெங்காயம் இவைகளை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பனீரை சிறுதுண்டுகளாக நறுக்கி வைக்கவும். கொள்ளு பருப்புடன் போதிய அளவு நீர் சேர்த்து வேகவிடவும். பாதிபதம் வெந்ததும், நறுக்கிய தக்காளி, காப்சிகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பனீர், தனியாத்தூள், கரம் மசாலா தூள் இவைகளைச் சேர்த்து உப்பிட்டு நன்கு கலந்து தொடர்ந்து வேகவிடவும். தண்ணீர் முழுதும் நன்கு வற்றி, மசாலா வகைகள் நன்கு சுருண்டு கமகம என வாசனை வந்ததும், கடுகு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். இதில் கொத்துமல்லி கீரையை மேலாகத் தூவிக் கொள்ளவும். கொள்ளு பனீர் மசாலா தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT