மகளிர்மணி

அதிகம் டீ குடிப்பவரா நீங்கள் ...

ஜோ ஜெயக்குமார்


காலையில் எழுந்ததும் டீ குடித்தால்தான் சிலருக்கு அன்றைய நாளே சிறப்பாக இருக்கும் என்று உணர்பவர்களும் உண்டு. ஆனால், அதிகமாகத் தேநீர்(டீ ) குடிப்பதால் ஏற்படும் சில பக்க விளைவுகள் சிலருக்கு தெரியவில்லை. நாளொன்றுக்கு மூன்றாவது கோப்பைக்கு மேல் டீ குடித்தால் ஐந்து பக்க விளைவுகள் ஏற்படும்  அபாயம்  உண்டு.  அவை  என்னவென்று பார்ப்போம்:

தூக்கமின்மை

தேநீரில் உள்ள காஃபின் (Caffeine) அதிகமாக எடுத்துக் கொண்டால் லேசான டையூரிடிக் விளைவுக்கு வழிவகுக்கின்றது. இது தூக்கமின்மையை  ஏற்படுத்திவிடும்.

மலச்சிக்கல்

தேநீரில் தியோபிலின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. அதிக அளவில் தேநீர் அருந்தும்போது அது செரிமானத்தின் போது நீரிழப்பை ஏற்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

கருச்சிதைவுக்கு சாத்தியம்

கர்ப்பிணி பெண்கள் தேநீரை முழுவதுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதன் காஃபின் உள்ளடக்கம் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் கருச்சிதைவு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.

கவலை மற்றும் அமைதியின்மை

Caffeine மனநிலையை மேம்படுத்த அதிகரிக்கும் மருந்துகளில் ஒன்றாகும், மேலும் இது நம் உடலில் சில நல்ல மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. தேநீர் அதிகமாக உட்கொள்வதால்  அமைதியின்மை, பதட்டம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிக்கின்றது. மேலும் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT