மகளிர்மணி

குத்துவிளக்கை தரையில் வைத்து ஏற்றலாமா?

ஆர். ஜெயலட்சுமி


அகல் பயன்படுத்தும் முன் தண்ணீரில் நனைத்து காய வைத்து பிறகு விளக்கு ஏற்றினால் எண்ணெய் நிறைய உறிஞ்சாது.
 

*கார்த்திகைக்கு ஏற்றும் விளக்குகளை காலையிலேயே தேய்த்து ஈரம் போக துடைத்து குங்குமப் போட்டு வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி வைத்துவிட்டால் மாலையில் விளக்கேற்ற சுலபமாக இருக்கும்.

*சிறிய சிறிய விளக்குகளை அகலமான ஒரு தாம்பாளத்தில் அல்லது தட்டில் வரிசையாக வட்டமாக வைத்து தீபம் ஏற்றினால் பார்க்க அழகாக இருக்கும். அதே சமயம் எண்ணெய்யும் தரையில் சிந்தாது.

*வெள்ளி விளக்குகளை விபூதி கொண்டு துடைத்து பிறகு ஏற்றினால் புதிதாக பிரகாசிக்கும்.

*பஞ்சு திரியை சிறிய விளக்குகளுக்கு சிறியதாகவும், பெரிய விளக்குகளுக்கு பெரிய திரியாகவும் போட்டால் தீபம் நின்று நிதானமாக எரியும்.

*குத்துவிளக்கை பலகையிலோ அல்லது தாம்பாளத்திலோ வைத்துதான் வைக்க வேண்டும். வெறும் தரையில் வைக்கக் கூடாது.

*விளக்குகளை ஏற்றி முடித்த பிறகு தேய்க்கும்போது முதலில் எண்ணெய்யை வேஸ்ட் துணி கொண்டு துடைத்து பிறகு எலுமிச்சம்பழத்தால் தேய்த்து, பிறகு சபீனா கொண்டு தேய்த்தால் எண்ணெய்ப் பிசுக்கே இல்லாமல் நீங்குவதோடு விளக்கும் ஜொலிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT