உலகெங்கிலும் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகின்றனர். மக்களையும் அவர்கள் விரும்பும் விஷயங்களையும் நெருக்கமாக கொண்டு வருவதே இந்த இணைய வளர்ச்சியின் நோக்கமாக உள்ளது.
இன்ஸ்டாகிராமில் உள்ள பல துறைகளைச் சார்ந்த நபர்கள், பிரபலங்கள், நம் நாட்டின் கலாசாரத்தோடு பொருந்தும் விஷயங்கள் மற்றும் காட்சி வாயிலாக கருத்துக்களை பகிரும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, இந்தியாவிலும் இது மிகப்பிரபலமான செயலியாக உள்ளது. பிரியங்கா சோப்ரா முதல் விராட் கோலி வரை, தீபிகா படுகோன் முதல் ரத்தன் டாடா வரை பல பிரபலங்கள் இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் நடிகை ஜோதிகா.
ஜோதிகா பேசும் போது..."" இன்ஸ்டாகிராம் மூலமாக எனது சமூக வலைதள பயணத்தை துவங்குவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது ரசிகர்களுடன் என் வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை பகிர்ந்துகொள்ளப் போவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். பல கோடி மக்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் என்னையும் இணையுமாறு நண்பர்கள் நீண்டகாலமாகவே சொல்லி வந்தனர். ஃபேஸ்புக் இந்தியாவின் கூட்டமைப்புகளின் தலைமை அதிகாரி மனீஷ் சோப்ரா ஜோதிகாவை இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வந்ததற்காக வரவேற்று பேசியுள்ளார்.