கச்சேரியில் இரு நாதசுவரங்கள் இணைந்து வாசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்கள் திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை, சிவசுப்பிரமணிய பிள்ளை சகோதரர்கள் ஆவர்.
புகழ்பெற்ற தவில் கலைஞர்டகளான ஸ்ரீவாஞ்சியம் கோவிந்தப் பிள்ளை, மன்னார்குடி பல்லுப் பக்கிரிப் பிள்ளை, அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை, வழுவூர் முத்துவீரப் பிள்ளை ஆகியோர் இச்சகோதரர்களுக்கு தவில் வாசித்துள்ளனர்.
தீட்சிதர் கீர்த்தனைகளில் 50 பாடல்களை தீட்சிதர் கீர்த்தனப் பிரகாசிகை எனும் பெயரில் நூலாக நடராஜசுந்தரம் பிள்ளை வெளியிட்டார். முறையான பாட அமைப்பினை இந்த நூல் கொண்டிருந்தது.
பிரபல புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை, நடராஜசுந்தரத்தின் மூத்த மகனாவார்.