கிரிக்கெட் வீரர் ரோஜர் பென்னிக்கு மிருகங்கள் மீது தனி ஈடுபாடு உண்டு.
சமீபத்தில் கர்நாடகா கோல்ப் அசோசியேஷனுக்கு வந்த பென்னி ஒரு காட்சியை கண்டு திகைத்தார்.
ஒரு கருப்பு நாயை மற்ற நாய்கள் சுற்றிக் கொண்டு குலைத்ததுடன் கடிக்கவும் செய்தன.
அதனைக் கண்ட பென்னி, நாய்களை விரட்டி விட்டு, கருப்பு நாய்க்கு பட்ட காயங்களை குணப்படுத்துவதற்காக மிருகங்களை காப்பாற்றும் மையத்தில் சேர்த்தார்.
அதற்கு அங்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.
அதனைப் பார்க்க வந்த பென்னியை, அந்த நாய் நின்று கைகுலுக்கி கட்டிக் கொண்டு நன்றி தெரிவித்தது!