புதுமுகங்கள் அபிசேக், பிரீத்தி டயானா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் "ஆர்வகோளாறு'. ஜிவி.சந்தர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். மார்ட்டின் ஜெயராஜ், யாகவன், ஜெகதீஷ், சக்தி, பாய்ஸ் ராஜன், சிந்து உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாடல்களுக்கு சரண் பிரகாஷ் இசையமைக்கிறார். காட்சிகளின் பின்னணிக்கு பாலகணேஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் ஸ்ரீநிவாஸ் மேற்கொள்கிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""ஆர்வகோளாறு அது தொழிலில் இருக்கலாம். நட்பில் இருக்கலாம். காதலில் இருக்கலாம். குடும்பத்தில் இருக்கலாம். நாம் செய்த ஆர்வக்கோளாறுகளை தவிர்க்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதை சுவாரஸ்யமாக சொல்லுவதே திரைக்கதை!'' என்றார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.