வணிகம்

ஈஐடி பாரி லாபம் ரூ.286.90 கோடியாக உயர்வு

DIN

சென்னை: சர்க்கரை உற்பத்தியாளரான ஈஐடி பாரி (இந்தியா) லிமிடெட் மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.286.90 கோடியாக பதிவு செய்துள்ளது.

முருகப்பா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்நிறுவனம், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.428.96 கோடியாக பதிவு செய்துள்ளது.

2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் ரூ.1,573.70 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,827.74 கோடியானது.

மதிப்பீட்டு காலாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் ரூ.5,756.35 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.6,865.28 கோடியானது.

2023 மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருமானம் ரூ.23,743.798 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.35,283.02 கோடியானது.

சர்க்கரைப் பிரிவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு லாபம் ரூ.176 கோடியாகவும், முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ரூ.194 கோடியாகவும் இருந்தது.

வேளாண் இடுபொருட்கள் பிரிவு கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.397 கோடியிலிருந்து ரூ.432 கோடியாக அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஈஐடி பாரி நிர்வாக இயக்குனர் எஸ்.சுரேஷ், சிறந்த விற்பனை வருவாய் மற்றும் அதிகரித்த உள்நாட்டு விற்பனை அளவு காரணமாக சர்க்கரை பிரிவின் முழுமையான செயல்பாட்டு லாபம் முந்தைய ஆண்டை விட சிறப்பாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT