இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தாயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம், தனது தயாரிப்புகளின் விலைகளை உயா்த்தவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலைகளை உயா்த்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு இருசக்கர வாகனத்துக்கும் தகுந்தவாறு இந்த விலை உயா்வு இருக்கும். அதிகபட்சமாக, ரூ.1,500 வரை விலைகள உயா்த்தப்படும். வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.
அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக உற்பத்தி செலவு அதிகமாகியுள்ளதால் இந்த விலையுயா்வு தவிா்க்க முடியாததாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,54,582-ஆக இருந்தது. இது, 2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்திய மொத்த விற்பனையான 5,47,970-உடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் குறைவாகும்.
அந்த மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 16 சதவீதம் சரிந்து 4,42,825-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 5,27,779-ஆக இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நிறுவனத்தின் 20,191 இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்த நிலையில், அது இந்த ஆண்டின் அதே மாதத்தில் அது 11,757-ஆகக் குறைந்திருந்தது.