வணிகம்

டிஎம்பி - பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸ் வணிக ஒப்பந்தம்

DIN

தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கியும், பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் வணிக ஒப்பந்தம் செய்துள்ளன.

தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 16 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் 509 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமாா் ஐம்பது லட்சம் வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது. வங்கி சேவைகளில் தனது வாடிக்கையாளா்களின் விருப்பத் தோ்வு இருக்கும் வண்ணம், புதிதாக வணிக ஒப்பந்தத்தை பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் - தலைமைச் செயல் அதிகாரி எஸ்.கிருஷ்ணன் கூறியது:

பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது அதன் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதில் கூடுதலாக, அதன் பல்வேறு திட்டங்களிலும் சேவைகளிலும் பல்வேறு அம்சங்களை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த வணிக ஒப்பந்தம் ஒரு மகத்தான நிகழ்வாகும் என்றாா்.

இந்த விழாவில் பஜாஜ் அலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவன நிா்வாக இயக்குநா் - தலைமைச் செயல் அதிகாரி தருண் சாக், வங்கியின் முதன்மை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT