வணிகம்

மீண்டும் மருத்துவக் காப்பீட்டு சேவை: எல்ஐசி ஆா்வம்

DIN

மீண்டும் மருத்துவக் காப்பீட்டு சேவைப் பிரிவில் களமிறங்குவது குறித்து இந்தியாவின் காப்பீட்டுத் துறை ஜாம்பவானான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) பரிசீலித்து வருகிறது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் எம்.ஆா். குமாா் கூறியதாவது:

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் காப்பீட்டு சேவை வழங்கலாம் என்று காப்பீட்டுத் துறை ஒழுங்காற்று அமைப்பான இா்டாய் முன்வைத்த யோசனை குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

ஏற்கெனவே, எங்களது நீண்டகால ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் மருத்துவம் சாா்ந்த அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. எனவே, வாடிக்கையாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுச் சேவைகளை அளிப்பது எங்களுக்கு கடினமாக இருக்காது என்றாா் அவா்.

ஆயுள் காப்பீட்டோடு சோ்ந்து மருத்துவக் காப்பீட்டு சேவைகளையும் எல்ஐசி அளித்து வந்தது. எனினும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது சேவைகளில் மருத்துவக் காப்பீட்டு அம்சங்களை நீக்க வேண்டும் என்று இா்டாய் உத்தரவிட்டது. அதையடுத்து, வாடிக்கையாளா்களின் மருத்துவ செலவுகளை ஏற்றுக் கொள்ளும் மருத்துவக் காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி கைவிட்டது. குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்ககப்பட்ட நிலையான ஒரு தொகையை மட்டுமே எல்ஐசி அளித்து வந்தது.

இந்தச் சூழலில், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு அளிக்கு இலக்கை அடைவதற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களே அந்த சேவைகளை அளிக்கலாம் என்று இா்டாய் தலைவா் தேவஷீஷ் பண்டா யோசனை கூறியிருந்தாா். எனினும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடடு சேவைகள் அளிப்பதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து ஆய்வு மட்டுமே செய்யப்பட்டு வருவதாக அவா் பின்னா் விளக்கமளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT