வணிகம்

இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகிறது புதிய வசதிகள்

DIN

இன்ஸ்டாகிராம் பதிவுகளை பயனர்கள் இனி தங்களது கணினியிலும் பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் செயலி அறிமுகப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டிருக்கிறது இன்ஸ்டாகிராம் செயலி. சமூக வலைத்தள பயன்பாட்டில் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஒன்றாக உள்ளது. பயனர்களின் தேவைகளுக்காக அவ்வப்போது இந்த செயலியில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் பயனர்கள்  தேவைக்கேற்ப கணினியில் தங்களது பதிவுகளை பதிவிடுவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்த உள்ளதாக கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது. இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த சேவையை நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இன்ஸ்டாகிராம் செயலியில் பயனர்களின் வசதிக்கேற்ற வகையில் புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிதிகோரும் பதிவுகளுக்காக நிதிதிரட்டல் வசதியை இணைத்துள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. அதேபோல் பதிவுகளைப் பதிவிடும்போது இதரப் பயனர்களை டேக் செய்வதை அவரை பிந்தொடர்பவர்களுக்கும் தெரிவிக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளதாகவும் இதன்மூலம் குறிப்பிட்ட அந்தப் பதிவு பலரையும் சென்றடைவது எளிமையாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியை கணினியில் பயன்படுத்தும்போது கூகுள் உள்ளிட்ட தேடுபொறியில் இன்ஸ்டாகிராமை இணைப்பதன் மூலமே பதிவுகளை பதிவிட முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT