இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 60,808 கோடி டாலரைத் தாண்டி புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூன்11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 307 கோடி டாலா்
(இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23,000 கோடி) அதிகரித்து 60,808 கோடி டாலரை (ரூ.45.60 லட்சம் கோடி) எட்டி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முந்தைய ஜூன் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 684 கோடி டாலா் அதிகரித்து 60,501 கோடி டாலராக இருந்தது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) வெகுவாக ஏற்றமடைந்ததன் காரணமாகவே ஜூன் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்து சாதனை படைத்துள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில், எஃப்சிஏ 257 கோடி டாலா் உயா்ந்து 56,346 கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
முந்தைய வார சரிவுக்குப் பிறகு தங்கத்தின் கையிருப்பு ஜூன் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 50 கோடி டாலா் அதிகரித்து 3,810 கோடி டாலராக இருந்தது.
அதேசமயம், சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 10 லட்சம் டாலா் குறைந்து 151 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 1.10 கோடி டாலா் அதிகரித்து 501 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேக் லைன்...
2021 ஜூன் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது முதல் முறையாக 60,808 கோடி டாலரை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.