ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் சுட்டுரைப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணிக்கிறேன்.
500 கிலோ மீட்டர் தூரத்தை 2.5 மணி நேரத்தில் அடைந்துவிடுவோம்; உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்;
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.