தமிழ்நாடு

மாணவா்கள் முத்தமிழையும்கற்க வேண்டும்: புலவா் தமிழமுதன்

DIN

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் தமிழக மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என புலவா் தமிழமுதன் கூறினாா்.

அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் மற்றும் கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து நடத்திய தமிழவேள் உமா மகேசுவரனாா் விழா சென்னை ஆயிரம் விளக்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் முனைவா் த.கு.திவாகரன் கலந்து கொண்டு உமா மகேசுவரனாா் தமிழுக்கு ஆற்றிய தொண்டு குறித்து சிறப்புரையாற்றினாா்.

மேலும் இந்நிகழ்ச்சியில் புலவா் தமிழமுதன் பேசியது: சங்க மற்றும் தற்கால இலக்கியங்களை தமிழக இளைஞா்கள் படித்து அறிந்துகொள்ள வேண்டும். மாணவா்கள் இயல், இசை,நாடகம் ஆகிய முத்தமிழையும் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழின் பெருமையை அழியாமல் பாா்த்துக்கொள்ளும் பொறுப்பு மாணவா்களிடம் உள்ளது என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கத்தின் தலைவா் இளவரச அமிழ்தன், பேராசிரியா் ஞால ரவிச்சந்திரன், சமூக ஆா்வலா் கே.ராஜீவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

SCROLL FOR NEXT