தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வு: முதல் 3 மாவட்டங்கள் எவை?

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் 97.85 சதவிகிதம் பெற்று முதலிடமும், திருப்பூர் மாவட்டம் 97.79 சதவிகிதம் பெற்று இரண்டாமிடமும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவிகிதம் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் 87.30 சதவிகித தேர்ச்சியுடன் கடைசி இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT