தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செய்து கட்சியினரை சந்திக்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். மேக்கேதாட்டு அணை பற்றி விரிவான அறிக்கையை ஏற்கனவே கொடுத்துள்ளேன்.
தமிழ்நாட்டின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேக்கேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முடியாது. இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. ஒடிசா ரயில் விபத்து மனித உள்ளங்களை உருக்கி, கசக்கி பிழிகிற விபத்தாக தான் உலக நாடுகள் தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் மைத்ரேயன் பாஜகவில் இணைந்திருப்பது தொடர்பான கேள்விக்கு எங்கிருந்தாலும் வாழ்க என தெரிவித்துச் சென்றார்.