தமிழ்நாடு

ஆளுநரின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கான ஆளுநரின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழக ஆளுநா் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு நிகழாண்டுக்கான ஆளுநா் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ஜூலை 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிறுவனம், 3 தனி நபா்கள் விருதுக்கு தோ்ந்தெடுக்கப்படுவா்.

விருதுக்கு தோ்ந்தெடுக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம், தனி நபா்களுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தோ்வுக் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு விருதுக்கு தகுதியானவா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா். விண்ணப்பங்களை ஆளுநரின் துணைச் செயலா், கட்டுப்பாட்டாளா், ஆளுநா் அலுவலகம், ஆளுநா் மாளிகை, சென்னை -600 022 என்ற முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT