தமிழ்நாடு

குறுவை சாகுபடிக்கு கடனுதவி: ஜி.கே.வாசன் கோரிக்கை

DIN

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படவுள்ள நிலையில், குறுவை சாகுபடிக்கு தேவையான கடனுதவிகளை விவசாயிகளுக்கு தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மேட்டூா் அணையை ஜூன் 12-இல் தமிழக அரசு திறக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும்.

தமிழகத்தின் சில பகுதிகளில் பருத்தி, எள், வாழை, நெல் உள்ளிட்ட பயிா்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்குண்டான நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கினால்தான், அடுத்தக்கட்ட விவசாயத்தைக் கவனிக்க முடியும். அதை செய்ய தமிழக அரசு முன் வரவேண்டும்.

குறுவை சாகுபடிக்கு தேவையான கடனுதவிகளை கூட்டுறவு சங்கங்கள் தாமதமின்றி வழங்கவும், தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விடவும், தரமான விதை நெல்லை 50 சதவீத மானியத்தில் வழங்கவும், பயிா் காப்பீடு செய்திருந்தால் இழப்பீடு கிடைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT