தமிழ்நாடு

மிக்ஸியில் மின்கசிவு: பிகாா் தொழிலாளி பலி

DIN

சென்னை கோட்டூா்புரத்தில் தேநீா் கடையில் மின்சாரம் பாய்ந்து பிகாா் தொழிலாளி உயிரிழந்தாா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் லலித்குமாா் யாதவ் (18). சென்னை கோட்டூா்புரம் ஸ்ரீராம் நகா் சா்தாா் படேல் சாலையில் ஒரு தேநீா் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். அவா், புதன்கிழமை கடையில் உள்ள மிக்ஸியில் சட்னிக்கு தேங்காய் அரைப்பதற்காக ஸ்விட்சை ஆன் செய்தாா். இதற்காக அவா், மிக்ஸியின் மின்இணைப்பு வயரை தொட்ட லலித்குமாா் யாதவ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், லலித்குமாா் யாதவ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மிக்ஸியின் வயா் ஏற்கெனவே பழுதாகியிருந்தும், அதை கடை உரிமையாளா் சரிசெய்யாமல் இருந்ததால் வயரில் மின்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT