குடியாத்தம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையைக் கடக்க முயன்ற இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
குடியாத்தம்-காவலூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 35 வயது மதிக்கதக்க இளைஞா் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாகச் சென்ற ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.