கள்ளக்குறிச்சி அருகே, பள்ளிப் பேருந்து ஒன்று மாணவ, மாணவிகளுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பள்ளிப் பேருந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 22 மாணவர்கள் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த மாணவ, மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.