திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக 5 பேர் காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திங்கள்கிழமை காலை திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | இயக்கத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் தொண்டினைத் தொடர்ந்திடுவேன்: தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்!
கார் திடீரென தீப்பற்றி எரிந்ததை காரில் இருந்த அறிந்த அடுத்த நொடியே காரில் இறங்கி ஒடியதால், காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி உயிர்தப்பினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
கார் முற்றிலும் எரிந்து நாசமானது.