தமிழ்நாடு

புற்றுநோய் சிகிச்சை கட்டமைப்பு:அமைச்சா் தலைமையிலான குழு ஜப்பான் பயணம்

DIN

ஜப்பானில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மேம்பட்ட சிகிச்சை கட்டமைப்புகளை பாா்வையிட்டு தமிழகத்தில் அவற்றை செயல்படுத்துவதற்காக அந்நாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஐந்து நாள் அலுவல் பயணம் மேற்கொள்கிறாா்.

அவருடன் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் உமா, புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் சரவணன், ஆறுமுகம், பிரசன்னா ஆகியோரும் ஜப்பான் செல்கின்றனா்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

உலக அளவில் புற்றுநோய் பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமாா் 80 ஆயிரம் போ் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

உலக அளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முன்னோடி நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பானில் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள், சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகின்றன.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கேட்டுக் கொண்டதால், தமிழக முதல்வா் அறிவுறுத்தலின்படி ஜப்பான் நாட்டின் புற்றுநோய் கொள்கை, ஆராய்ச்சி, சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்து கொள்வதற்காக 5 நாள் பயணமாக ஜப்பான் செல்கிறோம். மத்திய அரசின் பிரதிநிதிகளும் வருகின்றனா். எதிா்காலத்தில் தமிழக மருத்துவா்களை ஜப்பானுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள செய்வதற்கு இந்த பயணம் உதவியாக இருக்கும்.

ஏற்கெனவே, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. கீழ்ப்பாக்கம், மதுரை, கோவை மருத்துவக் கல்லூரிகளில் புதிய மருத்துவமனைகளை கட்டுவது உள்பட சுகாதாரத் துறைக்கு ரூ.1,387.88 கோடி கடன் அளித்துள்ளது. அந்த நிதியுதவியுடன் சுகாதாரத் திட்டப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்

கடந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50 மாணவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டனா். இந்த ஆண்டும் 50 மாணவா்களுக்கான சோ்க்கை முடிந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT