ராஞ்சி-விழுப்புரம் இடையே பிப்ரவரி மாதம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ஜாா்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து பிப்.3, 10, 17, 24 தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08068) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து பிப்.7, 14, 21, 28 தேதிகளில் (செவ்வாய்க்கிழமை தோறும்) மாலை 5.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 08067) வியாழக்கிழமை காலை 6.45 மணிக்கு ராஞ்சி சென்றடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு பயணசீட்டுக்கு சனிக்கிழமை (பிப்.4) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.