ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்கள் மாற்றப்பட்டனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.
அவரது உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
1. எஸ்.வளா்மதி - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா்)
2. டி.பாஸ்கர பாண்டியன் - திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் (ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்)
3. அமா் குஷ்வாஹா - சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் (திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்)
‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தை ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்குட்பட்ட வேலூா் மண்டலத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இரண்டு நாள்கள் கள ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு அவா் சென்னை திரும்பினாா். இந்த நிலையில், வேலூா் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.