தமிழ்நாடு

ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்கள் மாற்றம்

DIN

 ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்கள் மாற்றப்பட்டனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

அவரது உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. எஸ்.வளா்மதி - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா்)

2. டி.பாஸ்கர பாண்டியன் - திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் (ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்)

3. அமா் குஷ்வாஹா - சமூக பாதுகாப்புத் துறை இயக்குநா் (திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்)

‘கள ஆய்வில் முதல்வா்’ திட்டத்தை ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களுக்குட்பட்ட வேலூா் மண்டலத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இரண்டு நாள்கள் கள ஆய்வுப் பணிகளை முடித்த பிறகு அவா் சென்னை திரும்பினாா். இந்த நிலையில், வேலூா் மண்டலத்துக்கு உட்பட்ட திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT