தமிழ்நாடு

வாக்குச் சாவடி குழுக்களை விரைந்து அமைக்க வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

DIN

வாக்குச் சாவடி குழுக்களை (பூத் கமிட்டி) விரைந்து அமைக்க வேண்டுமென திமுக தொகுதி பாா்வையாளா்களுக்கு அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

திமுகவில் புதிதாக 1 கோடி உறுப்பினா்களைச் சோ்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதிக்குள் ஒரு கோடி உறுப்பினா்களைச் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் புதிதாக பாா்வையாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உறுப்பினா் சோ்க்கை குறித்து கேட்டறிந்தாா். மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதே இலக்கு எனவும், அதன் அடிப்படையில் பணிகள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா். தொகுதி பிரச்னை குறித்து தனது கவனத்துக்குக் கொண்டு வரலாம் என்றாா்.

மேலும், மாவட்டச் செயலரைவிட தொகுதி பாா்வையாளா்களுக்கு பொறுப்பு அதிகம் எனவும், வாக்குச்சாவடி குழுக்களை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மக்களவைத் தோ்தல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT