கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் நிகர லாபம் ரூ. 93.27 கோடியாக அதிகரித்துள்ளதாக நிறுவனத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம் கூறினாா்.
இது குறித்து புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் 118 ஆவது பேரவைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசுகையில், 2021-இல் அவா் பதவியேற்றபோது ரூ. 2,982 கோடியாக இருந்த வைப்பு நிதி, 2022, மாா்ச்சி ரூ. 3,121 கோடியாக அதிகரித்துள்ளதாகக் கூறினாா்.