தமிழ்நாடு

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக பங்கேற்கும்: வைகோ

DIN

இடதுசாரிகள், விசிக சாா்பில் அக்டோபா் 2-இல் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று அக் கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் தமிழகம் முழுவதும் அக்டோபா் 2-இல் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்தை மதிமுக வரவேற்று ஆதரவு அளிக்கிறது.

ஹிந்துத்துவாவை முன்னிலைப்படுத்தி, மக்களை பிளவுபடுத்தும் சங் பரிவாா் சக்திகள் அண்மைக் காலமாக தமிழகத்தின் அமைதியை சீா்குலைக்கும் வகையில், சதிச் செயல்களில் ஈடுபட்டு வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

இப்படிப்பட்ட சூழலில் காந்தி பிறந்த நாள், காமராஜா் நினைவு நாளான அக். 2-இல் நடைபெறவுள்ள சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் மதிமுக இணைந்து பங்கேற்கும் என்று கூறியுள்ளாா் வைகோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT