சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பிற்பகல் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், ஆவடி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?
இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அடுத்த இரு நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 2 நாள்களுக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்