தமிழ்நாடு

திருச்சி பொன்மலையில் தயாரான ஊட்டி மலை அதிவேக டீசல் என்ஜின் சேவை தொடக்கம்

DIN

திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தயாரான ஊட்டி மலை அதிவேக டீசல் என்ஜினை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட 66-வது டீசல் (லோகோ) என்ஜின் மற்றும் நீலகிரி ஊட்டிமலை ரயில் இன்ஜின்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் கூறியது:

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. பொன்மலை பணிமனை 100 வருட வரலாற்று சிறப்பு பெற்றுள்ள நிலையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில் அதிவேக டீசலால் இயக்கப்படும் ஊட்டி மலை ரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இன்ஜினை, உருவாக்க பாடுபட்ட தொழிலாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

'வந்தே பாரத் திட்டம்' தமிழகத்திற்கு வர கொஞ்சம் காலம் ஆகும். அவற்றுக்கு பயன்படும்  சில ரயில் பெட்டிகள் தொகுப்பு (ரேக்ஸ்கள்) நடப்பு நிதியாண்டில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் பாரத் கௌரவ் திட்டத்தில் ஏற்கனவே 5 ரயில்கள் இயங்குகின்றன. கூடுதலாக ஒரு ரயில் இந்த மாதத்திலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில்,3 ரயில்களும் இயக்கப்படும். இத்திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்கள் தேர்வு செய்ப்பட்டுள்ளன என்றார் அவர்.

நிகழ்வில் பணிமனை முதன்மை பொதுமேலாளர் ஷியாம்தார் ராம், துணைப் பொதுமேலாளர் டிஎல் கணேஷ், உள்ளிட்ட ரயில்வே பணிமனை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT