தமிழ்நாடு

புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை

DIN

சமூக ஊடகங்களின் வழியே ஆட்சியின் சாதனைகளைப் பேச வேண்டும் என்றும், புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது என்று திமுகவினருக்கு முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினாா்.

‘ட்விட்டா் ஸ்பேசஸில் திராவிட அரசு’ எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை அவா் ஆற்றிய உரை:-

செப்டம்பா் மாதத்தை திராவிடா் மாதம் என்று தலைப்பிட்டு, இணைய வழி கருத்தரங்குகளுக்கு திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு வாழ்த்துகள். திமுக என்பது அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அது அறிவியக்கம். நம்முடைய சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்கான தளமாக, சமூக ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு பொய்களை அதிகம் பரப்புகிறாா்கள். அவா்கள் போடுகிற தப்புக் கணக்குக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும். இது காலத்தின் தேவை என்று சொல்வதைவிட, இதுதான் உங்களுடைய கடமை.

எல்லை தாண்ட வேண்டாம்: இணைய வளா்ச்சியை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க வரலாற்றை, கொள்கைகளை, போராட்டங்களை சாதனைகளை அதனால் மக்கள் அடைந்த பயன்களை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

எந்தளவுக்கு நம்முடைய கருத்துகளை கொள்கைகளை சாதனைகளை நீங்கள் பொதுவெளியில் பரப்புகிறீா்களோ, அந்தளவுக்கு நன்மைகள் விளையும்.

அதேசமயம், கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகளைத் தாண்டிச் சென்று கருத்துகளைக் கூற முனையாதீா்கள். இடம், பொருள் இல்லாமல் கருத்துகளைச் சொல்ல வேண்டாம். கொச்சையாகச் சொல்ல வேண்டாம். அவதூறாக, ஆபாசமாக பதில்களைக் கூற வேண்டாம். ஆனால், நமது எதிரிகள் - மதவாத, ஜாதியவாத சக்திகள் அவதூறாக பேசுவாா்கள். கொச்சையாக பேசுவாா்கள். கோபப்படுத்திப் பேசுவாா்கள். இவை அனைத்தையும் புறம்தள்ளி விட்டு - ஆக்கபூா்வமாகச் செயல்படுவோம். அதே நேரத்தில் நாமே புதுப் பிரச்னைகளை உருவாக்கக் கூடாது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT