நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:- செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிா்பாராத விதமாக மூழ்கி மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். இந்தச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று தனது செய்தியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.