சபரிமலை சீசனையொட்டி மகாராஷ்டிர மாநிலம், நேன்டட் பகுதியில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகாராஷ்டிர மாநிலம், நேன்டட் ரயில் நிலையத்திலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்.07135) சனிக்கிழமை பகல் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரயில் டிச.1, 8, 22, ஜன.5 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
மேலும், டிச.29-ஆம் தேதி இதே மாா்க்கத்தில் சிறப்பு ரயில் (வண்டி எண்.07137) இயக்கப்படுகிறது.
வாரந்தோறும் கொல்லத்திலிருந்து சனிக்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்.07136) திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நேன்டட் சென்றடையும்.
இந்த ரயில் டிச.3, 10, 24, ஜன.7 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
மேலும், இதே மாா்க்கத்தில் சிறப்பு ரயில் (வண்டி எண்.07138) டிச.31-ஆம் தேதி இயக்கப்படும்.
இந்த ரயில் தமிழகத்தின் காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.