தமிழ்நாடு

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு!

DIN

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை  நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கின் விசாரணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறாது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு டிசம்பர் 6 ஆம் தேதி  விசாரிக்கப்படும் என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது.


மேலும், டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT