விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலியாகினர்.
சேகர் என்பவரின் மளிகைக் கடையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் விஷவாயு தாக்கி பலியாகினர். விஷவாயு தாக்கியதில் மணிகண்டன் (35), ஐயப்பன் (36) ஆகியோர் பலியானதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் தீயனைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புத்துறை மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் இருந்து 2 பேரையும் மீட்டனர். பின்பு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்
மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.