கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி புறவழிச்சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முன்பு நடைபெற்றது.
இந்த போட்டிகளை கம்பம் நகரசபை தலைவர் வனிதா நெப்போலியன், க.புதுப்பட்டி பேரூராட்சி தலைவர் சுந்தரி பாஸ்கரன் தொடக்கி வைத்தனர்.
இதையும் படிக்க: கரோனா பரிசோதனை தளர்வுகள்: மருத்துவத்துறை அறிவிப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மிதிவண்டி போட்டி ஆண், பெண் வீரர்கள் கலந்து கொண்டனர்.