காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழை வருவதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. செவ்வாய்க்கிழமை வினாடிக்கு 2,593 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 2,836 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | அமெரிக்கா: மூடிய லாரியில் 46 அகதிகளின் சடலங்கள்
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 106 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் புதன்கிழமை காலை105.40 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 72.01டி.எம்.சியாக இருந்தது.