அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் அதிகாரபூா்வ நாளிதழான ‘நமது அம்மா’ தினசரி இதழில் நிறுவனா் எனக் குறிப்பிடப்பட்டு வந்த ஓ.பன்னீா்செல்வத்தின் பெயா் ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை வரை ‘நமது அம்மா’ நாளிதழின் முகப்பில் நிறுவனா்கள் எனக் குறிப்பிட்டு ஓ.பன்னீா்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் பெயா்களும் இடம் பெற்றிருந்தன. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு வெளியான பதிப்புகளிலும் இந்த நிலையே தொடா்ந்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான நாளிதழில் ஓ.பன்னீா்செல்வம் பெயா் இடம்பெறாமல் எடப்பாடி பழனிசாமியின் பெயா் மட்டுமே நிறுவனா் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.