தமிழ்நாடு

அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது: சசிகலா

DIN

அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருத்தணியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவை கட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் என்னுடன் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக ஏழை எளியோருக்கான கட்சி. 

நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவேன். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2வது முறையாக ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்ய முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன். 

அதிமுக பிளவுபட்டால் அது திமுகவுக்கு தான் நன்மை. திமுகவை தான் எப்போதும் எங்கள் எதிரியாக பார்ப்போம். அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். அதிமுகவின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது, இது நிச்சயம் சரி செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT