தமிழ்நாடு

மதுபோதை! குடியிருப்புப் பகுதியில் கார் கவிழ்ந்து விபத்து

DIN

மது போதையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் குடியிருப்புப் பகுதிக்குள் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதி அருகே பல்வேறு குடியிருப்புகளும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளன.

மாடக்குளம் பகுதியில் இருந்து பழங்காநத்தம் செல்லும் இந்த பிரதான சாலையில், சிவப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக சாலையில் சென்றுள்ளது. 

இந்நிலையில், அரசு மாணவர் விடுதி அருகே வளைவில் வேகமாக காரை ஒட்டியதால், நிலைதடுமாறி காலனி தரிசு என்று சொல்லக்கூடிய பகுதியில் தலைகீழாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.

மேலும் மது போதையில் இருந்த சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பிய நிலையில், காரில் வந்த மற்றொரு நபர் நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுனரின் நண்பர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்த மக்களிடம் சமாதானம் கூறி  காரை வேகமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி காவலர்கள் வருவதற்குள் தப்பிச் சென்றனர்.

மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கக்கூடிய அந்த பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அப்பகுதி மக்கள்,  மதுபோதையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT