தமிழ்நாடு

சென்னையில் 500-ஐ நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு

DIN

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 500-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 1,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 345 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 497 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டில் 190, திருவள்ளூர் 63, கோவை 50 பேருக்கு அதிகபட்சமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT