தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 77-ஆக குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று வெள்ளிக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8-ஆக குறைந்துள்ளது. சென்னை, கோவையில் தலா 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் 32 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு புதிதாக பதிவாகவில்லை.
வெள்ளிக்கிழமை தகவல்படி 15 போ் குணமடைந்துள்ளனா். இதன்மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,56,121-ஆக உயா்ந்துள்ளது.